> குருத்து: தில்லையில் வெற்றிப் பேரணியும், பொதுக்கூட்டமும்!

February 23, 2009

தில்லையில் வெற்றிப் பேரணியும், பொதுக்கூட்டமும்!




“தீட்சிதர்களின் ஆதிக்கத்தை தகர்த்தோம்!
தில்லை கோயிலை மீட்டோம்!”


என்ற இரண்டு முழக்கங்களின் அடிப்படிடையில், தில்லையில் கடந்த சனிக்கிழமையன்று(21.02.2009) வெற்றிப்பேரணியும், பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பேரணிக்கு காவல்துறையால் முதலில் தடை விதிக்கப்பட்ட்டிருந்தது. பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக தில்லை இயக்கம் மக்கள் இயக்கமாக நடத்தியதன் விளைவாக, கடைசி நாளில் அனுமதி வழங்கப்பட்டது.

திட்டமிட்ட படி, மனித உரிமை பாதுகாப்பு மையம் தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாய விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி - புரட்சிகர அமைப்புகள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் தனது அணிகளோடு வந்திருந்தனர். பெரும்பாலும் செஞ்சட்டை அணிந்த தோழர்கள்.

பேரணி தில்லையின் கோவிலின் கீழ ரத வீதிக்கு அருகே துவங்கியது. வெற்றிப்பேரணியில் சர வெடி அதிர்ந்தது.

தப்பாட்ட குழுவினரின் அதிரடியான தப்பாட்டத்தால் உற்சாகம் களைக்கட்டியது. தாளத்திற்கு தக்கவாறு குழுவினரின் ஆட்டம் இருக்கிறதே! அப்பப்பா! தீட்சிதர்களை மண்டியிட வைத்த குஷியில் வந்த ஆட்டம்.

அடுத்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரின் கேலியான காட்சி சித்திரம்

“இரட்டை இலை சின்னத்தை
தனது விரல்களில் காண்பித்து கொண்டே
பார்ப்பனத் திமிருடன் நடந்து வரும்
“அம்மா!”
“அம்மாவின்” முந்தானையை பிடித்தபடி
காலில் விழுந்த படியே வரும்
சட்டையில்லாமல்
பூணுலுடன் கொழுத்த தீட்சிதர்

தீட்சிதர்களின்
அந்தரங்க சேஷ்டைகளுக்காக
செருப்பால்
அடித்துக்கொண்டே வரும்
4 பெண்கள்”


வெடியை விட, தப்பாட்டத்தை விட, முழக்கங்கள் தில்லை வீதிகளில் காற்றைக் கிழித்தன.

“தமிழில் பாடும் போராட்டம்
முதல் வெற்றி கண்டது பார்!

ஆலயம் மீட்கும் போராட்டம்!
அடுத்த வெற்றியை கண்டது பார்!

நக்சல்பாரிகளின் தலைமையிலே
உழைக்கும் மக்களின் போராட்டம்
வென்றது பார்! வென்றது பார்!

கொலை, கொள்ளை, கற்பழிப்பு
கிரிமினல் கேசில் சிக்கியுள்ள
தீட்சிதர்களை கைது செய்யாததின்
மர்மம் என்ன?

தில்லை நகர காவல் துறையே
பதில் சொல்! பதில் சொல்!

விரட்டியடிப்போம்!
விரட்டியடிப்போம்!
தீட்சிதர்களை
கோயிலை விட்டே
விரட்டியடிப்போம்!
தில்லையை விட்டே
விரட்டியடிப்போம்!

நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை
இடித்து தகர்த்திடுவோம்!
தகர்த்திடுவோம்!


தில்லையில் கோவிலைச் சுற்றி, முக்கிய வீதிகளான கீழ வீதி அருகே தொடங்கி, தெற்கு வீதியில் வந்து, மேல ரத வீதியில் ஊர்வலம் வந்த வழி நெடுகிலும் பொதுமக்கள் ஆர்வமாய் பேரணியைக் கண்டனர். கையில் வைத்திருந்த முழக்க அட்டைகளில் உள்ள வாசகங்களை வாசித்தனர். தொண்டர்கள் பொதுமக்கள் பலருக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்.

தில்லை மக்கள் இது போன்றதொரு, செஞ்சட்டைகள் அணிந்த நீண்ட, எழுச்சியான ஊர்வலத்தை இதற்கு முன் பார்த்திருக்க மாட்டார்கள்.

பேரணியால் தில்லை அதிர்ந்தது ஒரு புறம்! மறுபுறம் -தீட்சிதர்களின் இதயம், வயிறு எல்லாம் பயத்தால் அதிர்ந்திருக்கும்.

(பொதுக்கூட்டம் பற்றி அடுத்தப் பதிவில்)

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

தீட்சிதர்களுக்கு வந்த சோதனை!

Anonymous said...

தீட்சிதர்களை நடராசன் நக்சல்பாரிகளை கொண்டு சோதிக்கிறார்! தீட்சிதர்கள் தன் கற்பை/மாண்பை நிரூபிக்க தீக்குளிப்பார்களா? அல்லது உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் செல்வார்களா?