> குருத்து: பால் வெள்ளைக் காகிதம்!

December 11, 2012

பால் வெள்ளைக் காகிதம்!

காலைப் பனிபோல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் 'நான் ரொம்ப சுத்தமானவளாக்கும்' என்று அலட்டிக்கொண்டது ‍ 'நான் பிறக்கும் பொழுதுதே தூய்மையாகப் பிறந்தேன்; காலம் முழுவதும் நான் இவ்வாறே தூய்மையாக இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலனாக்கிலும் பரவாயில்லை. பொறுத்துக்கொள்வேன். ஆனால் கறுமையின் இருள் கைகள் என்னைத் தொட அனுமதிக்கப்பட்டேன்.  தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில் கூட வரமுடியாது.'

இந்தப் பேச்சைக் கேட்ட மைப்புட்டி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுக்கட்டிக்கொண்டது.

பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன.  அவையும், அந்த காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும் கற்போடும் வாழ்ந்தது.

வெறுமையாகவும்!

‍கலீல் ஜிப்ரான், மிட்டாய் கதைகளிலிருந்து....

0 பின்னூட்டங்கள்: