> குருத்து: காங்கிரசுகாரர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் யாருக்கு வேண்டும்?

April 9, 2013

காங்கிரசுகாரர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் யாருக்கு வேண்டும்?

முல்லைப்பெரியாறு, காவிரி, ஈழம் ‍என தேசிய பிரச்சனைகளில் தமிழக காங்கிரசுகாரர்கள் ஏதாவது சொல்லவேண்டுமே என கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். சொல்லிவிட்டு, இது தங்களது தனிப்பட்ட கருத்து என்கிறார்கள். 

நேற்று கூட மத்திய அமைச்சர் இலங்கைக்கு வணிகம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு இந்திய எம்.பி.க்கள் இலங்கை செல்லக்கூடாது என ஜெயந்தி நடராஜன் இப்படி பேசியிருக்கிறார்.

எதற்கும் பயன்படாத காங்கிரசுகார்களின் தனிப்பட்ட கருத்து யாருக்கு வேண்டும்? தங்களது தலைமையிடம் ஓரணியில் (!) நின்று போராடி தமிழகத்துக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்க வைத்தால் தான் தமிழகத்துக்கு பிரயோஜனம்.

இப்படி தனிப்பட்ட கருத்துக்களை கூட காங்கிரசுகாரர்கள் சொல்வதற்கு மக்கள் போராட்டங்கள் தான் நிர்பந்திக்கின்றன!

மக்களின் காத்திரமான போராட்டங்கள் தான் ஒரே தீர்வு!

0 பின்னூட்டங்கள்: