> குருத்து: டாஸ்மார்க்கை வைக்க கூடாதுன்னு சொல்றவங்க தீவிரவாதிங்களா?

June 28, 2013

டாஸ்மார்க்கை வைக்க கூடாதுன்னு சொல்றவங்க தீவிரவாதிங்களா?

டாஸ்மார்க் புதிய கடையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்!

பல்லாவரம் புதுவை நகரில் மக்கள் குடியிருப்பு பகுதியில் டாஸ்மார்க் கடையை அரசு திறக்க இருக்கிறது.

அந்த பகுதியில் அருகே ஒரு ரேஷன் கடை இல்லை. நூலகம் இல்லை. இப்படி அத்தியாவசிய தேவைகள் எல்லாம் தூரம் தூரமாய் இருக்க டாஸ்மார்க்கை மட்டும் அக்கறையாய் மிக அருகில் கொண்டு வந்து வைக்கிறது அரசு.

ஏற்கனவே டாஸ்மார்க்கை இழுத்து மூடுவோம் என போராடிக்கொண்டிருக்கும் 'பெண்கள் விடுதலை முன்னணி' தோழர்களுடன் கைகோர்த்து அந்த பகுதி வாழ்மக்கள் தங்கள் போராட்டத்தை துவங்கியிருக்கிறார்கள்.

வெயில் அதிகம் என ஒரு சாமியானா பந்தல் போட்டு அமர்ந்தால், காவல்துறை "பந்தலை பிரித்துவிடுங்கள். இல்லையெனில் நடப்பதே வேறு!" வந்து மிரட்டுகிறது. கடை அங்கு வைத்தால், காவல்துறைக்கு வருமானம் கொட்டும் அல்லவா! அதற்கு தான் அவ்வளவு விசுவாசம்.

அந்த பகுதியில் போராடும் மக்களில் ஒரு வியாபாரியிடம், "நீங்க நக்சலைட்டுகளை எல்லாம் போராட துணைக்கு வைத்திருக்கிறீர்கள்" என பயமுறுத்தியதாம்.

போராடுகிற மக்களிடம் வந்து அதை பகிர்ந்து கொள்ளும் பொழுது..

உடனே அங்கிருந்த ஒரு நடுத்தர வயது அம்மா "குடும்பங்களை சீரழிக்கிற டாஸ்மார்க்கை வைக்கிற இவங்க நல்லவங்க! வைக்காதேன்னு போராடுற பெண்கள் விடுதலை முன்னணி தீவிரவாதிங்களா!" என பளிச்சென்னு பதில் சொன்னார்.

நேற்று இந்த போராட்ட செய்தி பல தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பினார்கள்.

குடியிருப்பு பகுதியில் டாஸ்மார்க்கை அனுமதிக்க மாட்டோம்னு போராடும் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். போராட்டம் வெற்றியடைய நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்!

1 பின்னூட்டங்கள்:

வலிப்போக்கன் said...

டாஸ்மார்க்கை கொண்டு வந்து வைக்கிறது அரசுதான். தீவிரவாதி அரசு.