> குருத்து: மழைக்கு கூட ஒதுங்காதவர்கள்!

December 3, 2013

மழைக்கு கூட ஒதுங்காதவர்கள்!

தினகரன் பத்திரிக்கை செய்தியில், "ஒரே ஒரு பக்தரை வைத்துக்கொண்டு, மழைக்கு கூட கோயில் பக்கம் ஒதுங்காதவர்கள் போராட்டம் செய்கிறார்கள்" என ஆலய பாதுகாப்பு குழு என்ற பெயரில் தீட்சிதர் கும்பல் சொல்கிறது.

தமிழ் தீட்டுமொழி என்று அறிவிக்கும் தீட்சிதர்களின் திமிரை ஒடுக்கவும், கொள்ளை போகும் மக்களுக்கான தில்லை கோயிலை மக்களுக்கே மீட்டுக்கொடுப்பதற்காகவும், மழையில் கூட கோயிலுக்கு ஒதுங்காத தோழர்கள் இப்பொழுது அடாத மழையிலும் உற்சாகத்துடனும், உறுதியுடனும் போராடியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

பக்தர்களாகிய மக்கள் தங்கள் கோயிலுக்காக  போராட்ட களத்திற்கு வரும் வரை தான், மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்களுக்கும், நக்சல்பாரி தோழர்களுக்கும் அங்கு வேலை! மக்களுக்காக காத்திருக்கிறார்கள் தோழர்கள்!

0 பின்னூட்டங்கள்: