> குருத்து: மழை விட்டாலும் தூவானம் விடவில்லை!

October 15, 2022

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை!

 











இந்த மாதத்தின் முதல் வாரத்தில் பிறந்தநாள் ”வாசிப்பை நேசிப்போம்” உறுப்பினர்கள் பலர் புத்தகங்கள் அனுப்பி பிறந்தநாள்
வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.
 
பிறந்தநாள் முடிந்து எட்டு நாட்களை கடந்தும், புத்தகங்கள் மூலம்
வாழ்த்துகள்
 
வந்தவண்ணம் இருக்கின்றன. என் பிறந்தநாள் நன்றி பதிவைப் பார்த்து.. ”ஏதோ படிக்கிற மனுசன் போல! இன்னும் படிச்சு அறிவை தேத்தட்டும். சமூகத்துக்கும் பயன்படட்டும்” என புத்தகங்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறீர்கள்.
புத்தகங்கள் அனுப்பி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், வரலாற்றுப் புத்தகம், தத்துவம் என எல்லாமும் விதவிதமான புத்தகங்கள். எல்லாவற்றையும் படித்து ஒவ்வொன்றாக பதிவு எழுதுவதற்குள் அடுத்த பிறந்தநாள் வந்துவிடும் என நினைக்கிறேன். 🙂

0 பின்னூட்டங்கள்: