> குருத்து: நானே வருவேன் (2022)

October 30, 2022

நானே வருவேன் (2022)


இரட்டையர்களான பத்து வயதிற்குள்ளான பையன்கள். மூத்தவன் ஒரு சிக்கலான மனநிலையில் வளருகிறான். கண்டித்த அப்பாவையே கொன்றுவிடுகிறான். மறைத்துவிடுகிறார்கள். இரட்டையர்கள் ஒன்றாக இருந்தால், நல்லதில்லை. அசம்பாவிதம் ஆகும் என ஜோசியர் சொல்ல, மூத்தவனை ஓரிடத்தில் விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர்.


தம்பி திருமணமாகி, பள்ளி செல்லும் வயதில் ஒரு மகளோடு வாழ்கிறார். வாழ்க்கை நல்லபடியாக போய்க்கொண்டு இருக்கிறது. திடீரென சில அமானுஷ்ய நடவடிக்கைகள் தென்படுகின்றன. மகளுக்குள் ஒரு ஆவி புகுந்து கொண்டு நிறைய தொல்லைகள் செய்கிறது. உள்ளே புகுந்த ஆவி ஒரு வில்லங்கமான கோரிக்கை ஒன்றை வைக்கிறது. அதை நிறைவேற்றவில்லை என்றால், மகளை கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறது.

அப்பாவி. ஆனால் தன் பாச மகளை மீட்க என்னவேண்டுமென்றாலும் (!) செய்ய தயாராக இருக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
***

ஏற்கனவே செல்வராகனின் சமீபத்திய படங்கள் ஓடாததால், வித்தியாசமாக எல்லாம் இல்லாமல், ஒரு எளிய கதையை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். திரைக்கதைக்காகவும், காட்சிகளுக்காகவும் கூட பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எடுத்து முடித்துவிட்டார்கள்.

ஆவி அப்பாவியின் மகளுக்குள் உள்ளே புகுந்து செய்ய சொல்வதை, அந்த வேலையை ஆற்றல் மிக்கதாக இருக்கும் ஆவியே செய்துவிடலாமே? கொல்லவேண்டிய நபர் சக்தி வாய்ந்த மந்திரவாதி அல்லவே! செல்வராகவனின் ஆவி ஏன் இப்படி ஒரு அப்பாவியை டார்ச்சர் செய்கிறது? இப்படி திரைக்கதை மிகவும் பலவீனமாக இருக்கிறது.

பலரும் சுட்டுவது போல, தனுசுக்கு நல்ல கதைகள் கொடுத்து நடிக்க வைங்கப்பா! வீணடிக்காதீங்க! என கேட்டுக்கொண்டு முடித்துக்கொள்கிறேன். படம் ஓடிருச்சு! வசூலாயிருச்சு! என சொல்லாதீர்கள். செல்வராகவன் மேலே ரெம்ப காண்டுல இருக்கேன். 🙂

ப்ரைம் வீடியோவிலும், அமேசானிலும் கிடைப்பதாக இணையம் சொல்கிறது.

0 பின்னூட்டங்கள்: