> குருத்து: பாரசிட்டமாலும் பட்ஜெட்டும்!

October 22, 2022

பாரசிட்டமாலும் பட்ஜெட்டும்!


பாரசிட்டமாலை ஹோமியோபதி மருத்துவர்கள் வெறுப்பார்கள். காரணம். அது மருந்தே இல்லை. செயற்கையாக உடலில் வியர்வை சுரப்பிகளை உருவாக்குகிறது என்பார்கள். ஜூரம் ஒருவருக்கு வருகிறது என்றால், அது பல காரணங்களால் வரலாம். அதன் ஜூரத்தின் தன்மை பொறுத்து எதனால் வருகிறது என்பதை கண்டறிந்து மருந்தை ஹோமியோபதிகாரர்கள் மருந்தை தருவார்கள். பாரசிட்டமால் என்ற கல்லைத் தூக்கி போட்டு ஜூரத்தை காணாமல் போக செய்தால் கோபம் வரத்தானே செய்யும்.


ஆனால் இந்த மாநிலத்தின் முதல் அமைச்சருக்கே ஜூரம் என்றால், எதனால் வருகிறது என டெஸ்ட்டுகள் மூலம் சோதித்து அறியாமல், தொலைபேசியிலேயே பாரசிட்டமால் கொடுங்க! என டாக்டர் சொன்னார் என்றால், பாரசிட்டமால் மீது ஒரு மரியாதை வருகிறது. 🙂

ஜெ. மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கையை நிறைய விவாதிக்கிறார்கள். இந்த விசாரணை தொட்டு தொட்டு தமிழ்நாட்டை கொள்ளையடித்து ஒளித்து வைத்திருக்கும் பணத்தை, சொத்தை எல்லாம் கைப்பற்றினால் ஐந்து வருடத்திற்கு தமிழ்நாட்டில் வரியே இல்லாமல் பட்ஜெட் போடலாம். இவர்கள் செய்யமாட்டார்கள். சோகம்.

0 பின்னூட்டங்கள்: