> குருத்து: ஆந்திர காரம்!

October 22, 2022

ஆந்திர காரம்!


ஒரு பெண்ணை ஒரு இளைஞன் ரயிலில் தள்ளிவிட்டு கொடூரமாக கொன்றுவிட்டான் என நாம் இங்கும் பதறிக்கொண்டு இருக்கிறோம்.


ஆந்திராவில் கல்லூரியில் படிக்கும் பொழுது பையனும், பெண்ணும் காதலித்து இருக்கிறார்கள். வீட்டில் இருவரும் சொல்லியிருக்கிறார்கள். இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால் பெற்றோர்கள் ஏற்கவில்லையாம். விளைவு. ஜூன் 5ம் தேதி அன்று காதலி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இந்த மாதம் 15ம் தேதி அந்த பையனை காணவில்லையாம். தேடினால், அந்த காதலியின் அப்பா அந்த பையனை கொன்று தன் பெண்ணின் சமாதி அருகே அவனையும் புதைத்துவிட்டாராம்.

படிக்க படிக்க டெரராக இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: