> குருத்து: கனவு

October 25, 2020

கனவு


ஒரு நாள், சிஷ்யன் திடீரென அழுதுகொண்டே தூக்கத்திலிருந்து கண்விழிக்கிறான்.

ஸென் குரு அவனிடம் பேசுகிறார்.

’கெட்ட கனவு எதாவது கண்டாயா?’

‘இல்லை’

’சோகமான கனவு ஏதேனும் கண்டாயா?’

’இல்லை… நான் கண்டது மிகவும் சந்தோஷமான கனவு’

‘பிறகு ஏன் அழுகிறாய்?’

சிஷ்யன் கண்ணீரை அமைதியாகத் துடைத்துக்கொண்டே சொல்கிறான் –

'ஏனெனில், நான் கண்ட கனவு ஒருபோதும் நிஜமாகாது என்பதால்தான்’....

- Karundhel Rajesh

0 பின்னூட்டங்கள்: