> குருத்து: விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்களை என்ன செய்வது?

November 22, 2021

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்களை என்ன செய்வது?

 


திரைத்துறை குறித்த பதிவுகளை தொடர்ச்சியாக எழுதி வருபவர் ஒரு பதிவர். கொஞ்சம் மூத்தவர். அதற்கு தகுந்தபடி அவருடைய பதிவுகளும், பழைய நடிகர்களை புகழ்ந்து புகழ்ந்து எழுதிக்கொண்டிருப்பார். அதில் ஏதும் பிரச்சனையில்லை.


பிற்போக்கான விசயங்களையும் புகழ்ந்து எழுதும் பொழுது தான் சிக்கல். ஏதாவது விமர்சனம் செய்தால் போச்சு! விமர்சன விசயத்தில் சங்கி போல! உடனே புண்பட்டுவிடுவார். ”சூப்பர்”. ”அருமை” என எழுதும் பொழுது பெருமகிழ்ச்சி கொள்கிறார். அதே போல விமர்சனத்தை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக்கொள்ளும் பக்குவமில்லை. அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது அல்லவா!

அவருடைய தனிப்பட்ட டைம்லைனில் போய் நாம் எதுவும் கருத்து சொல்வதில்லை. ஒரே குழுவில் ஒன்றாக பயணிக்கும் பொழுது, அவருடைய பதிவுகளும் கண்ணில் படுகின்றன. முன்பு ஒரு முறை விமர்சனம் சொல்லி, மிகவும் புண்பட்டுவிட்டார். அதற்கு பிறகு அவருடைய பதிவுகளைப் பார்த்தாலும், கண்டுகொள்ளாமல் போய்விடுவேன்.

இன்று குழுவில் அவருடைய பதிவைப் பார்த்ததும், வேறு சிலர் அந்த பதிவில் விவாதித்து இருந்ததைப் பார்த்ததும், நானும் ஒரு பின்னூட்டத்தைப் போட்டேன். அவ்வளவு தான் புண்பட்டுவிட்டார். அந்தப் பதிவையே உடனே அழித்துவிட்டார். எதுவும் நடக்காதது போல புதிதாக அதே பதிவை பதிவிடுகிறார். இது என்ன மனநிலை?

எதற்கு எடுத்தாலும் வரலாறு வரலாறு பழைய நிகழ்வுகளை பேசுகிறவருக்கு, விவாத மரபும் தமிழ் மரபு தான். ”பொன்னியின் செல்வன்” நாவலில் கவனித்தீர்கள் என்றால், சிவனடியாராக இருப்பவரும், பெருமாள் அடியவராக இருப்பவரும் நேரில் சந்திக்கும் பொழுதெல்லாம், காரசாரமாய் விவாதித்துக்கொள்வார்கள். சமண சமய துறவிகளுடன் இந்துத்துவ ஆட்கள் தொடர்ச்சியாக விவாதித்து இருக்கிறார்கள். இப்பொழுது பட்டி மன்றம் என்பது என்ன? இரண்டு தரப்பு கருத்துக்களை முன்வைத்து ஒரு சரியான முடிவுக்கு வருவது தானே!

தான் நினைப்பது தான் ஆகச்சரி. யாரும் எதிர்க்கருத்து சொல்லக்கூடாது என நினைத்தால், பதிவர் தன்னுடைய நாட்குறிப்பில் எழுதவேண்டும். அதை ஒத்த சிந்தனை நண்பர்களுக்கு மட்டும் வாட்சப்பில் அனுப்பிவிட்டு கம்முன்னு இருந்துக்கனும்.

அறிவு வளர்ச்சியில் விவாதத்திற்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. அதை எல்லாம் சங்கி மனநிலை கொண்டவர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. மோடியினுடைய காணொளிகள் எல்லாம் மக்கள் அதிகம் Dislike செய்வதால், யூடியூப்காரனை மிரட்டி, Dislike பட்டனையே தூக்கப்போகிறார்கள் என சமீபத்தில் ஒரு செய்திப் படித்தேன்.

சங்கி தானும் சிந்திக்கமாட்டான். சுயமாக சிந்திப்பவர்களை பார்த்தாலும், மாற்று கருத்து கொண்டவர்களை பார்த்தாலும் கோவம் கோவமாக வரும். எதுக்கு ஒரு ஜீவனை சிரமப்படுத்தவேண்டும். ஆகையால், சம்பந்தப்பட்ட பதிவரை பிளாக் செய்திடலாம் என யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள்?

- முகநூலில் இருந்து...!

0 பின்னூட்டங்கள்: