> குருத்து: சென்னையில் தொடர்ந்து உற்சாகமாக செயல்படும் GST Professionals Society

December 28, 2021

சென்னையில் தொடர்ந்து உற்சாகமாக செயல்படும் GST Professionals Society






2017ல் ஜி.எஸ்.டியை எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் திடீரென அறிமுகப்படுத்திய பொழுது ஏகப்பட்ட குழப்பம். பதட்டம். தொழில் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டியை எப்படி அமுல்படுத்துவது என விளக்கம் கொடுக்க வேண்டிய அதிகாரிகள் அப்பொழுது தான் ஜி.எஸ்.டி சட்டத்தைப் படித்துக்கொண்டு இருந்தார்கள். சமீபத்தில் வருமான வரித் தளம் எத்தனை பிரச்சனையாய் இருந்ததோ, அதை விட பல மடங்கு குழப்பத்தில் ஜி.எஸ்.டி தளம் இருந்தது. தணிக்கையாளர்களும், முதலாளிகளுக்கான சங்கங்களும் மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்கள். வரி ஆலோசகர்களும் தடுமாறி போயிருந்தார்கள்.


இந்த இக்கட்டான சமயத்தில் தான் சென்னையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வணிக வரித்துறையில் அனுபவம் வாய்ந்த செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் இந்த சொசைட்டியை தன்னைப் போலவே சிந்தனை கொண்டவர்களுடன் இணைந்து ஜி.எஸ்.டி புரொபசனல்ஸ் சொசைட்டி ஒன்றை உருவாக்கினார். எனது சீனியர் வில்லியப்பன் அவர்கள் செந்தமிழ்ச்செல்வன் அவர்களை அறிமுகப்படுத்தினார். இருவரும் சொசைட்டியில் உறுப்பினர்களாய் இணைந்தோம்.

சொசைட்டியில் தணிக்கையாளர்கள், வரி ஆலோசகர்கள், கணக்காளர்கள் என எல்லா நிலைகளிலும் உறுப்பினர்களாய் இருந்தார்கள். மாதம் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார்கள். அதில் ஜி.எஸ்.டி குறித்த விளக்க கூட்டங்கள் நடத்தப்பட்டது. உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன.

கொரானா காலத்திற்கு பிறகு செயல்பாடுகள் முடங்கி போகாமல், இன்னும் உற்சாகமாகின. வாரம் ஒரு கூட்டம் இணைய வழியில் (Zoom Via) நடத்தப்பட்டது. சொசைட்டியின் நிர்வாகிகளுக்கு பரந்துப்பட்ட தொடர்புகள் இருந்ததால், வாரம் ஒருவர் ஒரு தலைப்பில் உரையாற்றினார். தொடர்ச்சியாக கூட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.

சொசைட்டியின் பெயரில் ஒரு வாட்சப் குழு ஒன்று ஆரோக்கியமாய் இயக்கப்படுகிறது. அதில் புதிதாய் வரும் ஜி.எஸ்.டி நோட்டிபிகேசன்ஸ், அப்டேட்கள், செய்திகள், வழக்குகள், தீர்ப்புகள் குறித்த விவரம் என தினமும் நிர்வாகிகளால் பகிரப்படுகின்றன. நம்மால் தான் படிக்க முடியவில்லை. உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்படுகிறது.

நம் தொழிலில் எதிர்கொள்ளும் ஜி.எஸ்.டி குறித்த எந்த கேள்விக்கும், சந்தேகத்திற்கும், வழிகாட்டலுக்கும் நிர்வாகிகளை தொடர்புகொண்டால் உடனே பதிலளிக்கிறார்கள். வழிகாட்டுகிறார்கள்.

கடந்த ஆண்டு சொசைட்டி சார்பாக உறுப்பினர்களுக்கு பெரிய அளவில் மாத காலண்டர்களும், ஒரு தடிமனான டைரி ஒன்றும் தந்து தொடங்கி வைத்தார்கள். இதோ இந்த ஆண்டும் அதே போல உறுப்பினர்களுக்கு விநியோகித்திருக்கிறார்கள்.

சொசைட்டி என்பது கூட்டு நடவடிக்கை. ஒவ்வொருவரும் அதன் செயல்பாட்டில் பங்கெடுக்கும் பொழுது தான் அதன் பயனை எல்லோரும் பலன் பெறமுடியும். நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது பற்றி தொடர்ச்சியாய் சிந்திக்கிறார்கள். பேச்சாளர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறார்கள். கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள். இந்த சமயத்தில் உறுப்பினர்கள் சார்பாக நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜி.எஸ்.டி துவங்கிய காலத்திற்கு இன்றைக்கும் திருத்தங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அது குறித்த முக்கிய தீர்ப்புகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. இதை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தன்னை அப்டேட் செய்வது என்பது மிகச்சிரமம். ஆனால் கூட்டு நடவடிக்கை என்பது எளிதில் சாத்தியமாகிறது. ஆகையால் சொசைட்டியில் இணைய முன் வாருங்கள்.

சொசைட்டியை நம் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துவோம். சொசைட்டியில் சேர பதிவுக்கட்டணம் ரூ.100. மாதம் ரூ. 200 கட்டணம் என வருடத்திற்கு ரூ.2000. சொசைட்டியில் இணையுங்கள். வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும், என்னை அழையுங்கள். பதில் சொல்கிறேன்.

அழைக்க : 9551291721

புதிய ஆண்டை புதிய உற்சாகத்துடன் எதிர்கொள்வோம்!

நன்றி.

0 பின்னூட்டங்கள்: