> குருத்து: பழி!

March 10, 2022

பழி!


நாயகி வேலை செய்யும் அதே அலுவலகத்தில் அந்த ஆள் வேலை செய்கிறான். நாயகி தன் மகனுடன் தனித்து வாழ்ந்து வருவதை தெரிந்துகொண்டு, “என்னை எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளாலாம்” என சொல்ல. நாயகி செருப்பால் வெளுத்துவிடுகிறார். விசயம் பெரிசாகி, வேலை போய்விடக்கூடாதுன்னு என சுதாரித்து, அடுத்தநாளே அழுது, சீனைப் போட்டு மன்னிப்பும் கேட்டுவிடுகிறான்.


அதற்கு பிறகான நாட்களில், நாயகிடம் ஒரு ”சகோதரனைப்” போல பேசிப்பழகி வருகிறான். ஆனால், சக ஊழியர்களிடம் நான் நாயகியை கரெக்ட் பண்ணிட்டேன் என புளுகிவருகிறான். சந்தேகமாய் கேட்பவர்களிடம் ”இன்று மாலை 5 மணிக்கு நான் போன் செய்வேன். அவள் என்னைத் தேடி இந்த லாட்ஜ்க்கு வருவாள். நீங்க வந்தா பார்க்கலாம்!” என்கிறான். சொன்னது போல இவளும் அவசரம் அவசரமாய் கிளம்பி செல்கிறாள்.

பையனை யாரோ கடத்தியதாகவும், தான் அவனை மீட்டு வைத்திருப்பதாகவும், உடனே இங்கே வாருங்கள் என சொல்லியிருக்கிறான். நாயகியும் அடித்து பிடித்து இங்கே வந்துவிட்டாள். அவள் லாட்ஜின் அறைக்குள் உள்ளே நுழைந்ததும், கதவை சாத்துகிறான்.

அவன் பொய் சொல்லியிருக்கிறான் என தெரிந்ததும், அவள் பாட்டிலை உடைத்து ”பகக்த்துல வந்தா உன்னை கொன்றுருவேன்” என மிரட்டுகிறாள். உனக்கு பத்துநிமிசம் தர்றேன். அதுக்குள்ளே யோசித்து சொல்! என்கிறான். பத்துநிமிடம் கழித்து, கொஞ்சம் தலையை கலைத்துக்கொண்டு, சட்டையின் மேல்பட்டனை கழற்றிவிட்டுகொண்டு, ”வெளியே நம்ம சக ஊழியர்கள் வெளியே நிற்கிறார்கள். இப்ப நான் வெளியே போகப்போறேன். உள்ளே எதுவும் நடக்கலைன்னு உனக்கும் எனக்கும் தான் தெரியும். அவங்க கற்பனை பண்ணிக்குவாங்க!” என சொல்லிவிட்டு வெளியே போய்விடுகிறான். அடுத்தநாள் அலுவலகமே அவளைப் பற்றி பரபரப்பாய் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

இந்தப் பிரச்சனையை நாயகியை சரி செய்துவிடுவதாய் காண்பித்திருக்கலாம். கதைக்கு முக்கிய ட்விஸ்ட் தேவை என்பதால், மேலாளராய் இருக்கும் நாயகனே அவனை வெளுத்து உண்மையை சொல்லுவதாய் முடித்திருப்பார்கள்.

0 பின்னூட்டங்கள்: