> குருத்து: "சாக்கு போக்குகளை விட்டொழியுங்கள்" - பிரையன் டிரேசி

March 13, 2022

"சாக்கு போக்குகளை விட்டொழியுங்கள்" - பிரையன் டிரேசி


”மனிதனின் தோள்களில் இரண்டு ஓநாய்கள் இருக்கின்றன. ஒரு ஓநாய் அமைதி, அன்பு, நம்பிக்கை, உண்மை, இரக்கம், விசுவாசம் கொண்டது. இன்னொரு ஓநாய் பொறாமை, வருத்தம், சுயநலம், லட்சியம், பொய்கள் கொண்டது.


இரண்டுக்கும் எப்பொழுதும் சண்டைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இறுதியில் எந்த ஓநாய் வெற்றி பெறும்?

எந்த ஓநாய்க்கு உணவு அளிக்கிறானோ அந்த ஓநாய் வெல்லும்!”

****

”சுய ஒழுங்கு” தான் சிந்திக்கவைக்கும். முறையாக திட்டமிட வைக்கும். சுய ஒழுங்கு தான் தடைகள் பல வந்தாலும் செயல்படுத்த வைக்கும். சுய ஒழுங்கு தான் இலக்கை எட்டவைக்கும் என ’சுய ஒழுங்கும் தனிப்பட்ட வெற்றியும்’, ’சுயதொழிலும் வெற்றியும்’, ’சுயஒழுங்கும் சிறப்பான வாழ்க்கையும்’ என மூன்று பெரும் தலைப்புகள் தந்து, பொறுப்பாய் உட்தலைப்புகளில் பிரித்து, பலப்பல உதாரணங்கள் தந்து எளிமையாய் விளக்கியுள்ளார்.

ஒரு உதாரணம். துறை தொடர்பான விசயங்களை தினம் அறுபது நிமிடங்கள் படியுங்கள். படிக்க முடியவில்லையா கேளுங்கள். கேட்க முடியவில்லையா பாருங்கள். ஒரு துறையில் மேதைமை அடைய ஒரு மனிதன் ஏழு ஆண்டுகள் உழைக்கவேண்டும் அல்லது பத்தாயிரம் மணி நேரம் செலவழிக்கவேண்டும்.

எவ்வளவு எளிதாய் சொல்லிவிட்டீர்கள்? சுய ஒழுங்கு என்பது எவ்வளவு சிரமம் தெரியுமா? வாழ்வில் பல சமயங்களில் நிறைய தீர்மானங்களை யார் தலையின் மீதாவது சபதம் செய்வோம். சில நாட்கள் நினைவில் இருக்கும். மெல்ல மெல்ல மங்கலாகும். பிறகு காற்றில் காணாமல் போய்விடும் என சொன்னால், பரவாயில்லை. இந்தப் புத்தகத்தை மூடிவைத்து விட்டு, உங்கள் போக்கில் போய்விடுங்கள் என்கிறார்.

பிரையன் டிரேசி உலகமெல்லாம் சுற்றியுள்ளார். நிறைய மக்களுடன் உரையாடியுள்ளார். நிறைய எழுதியுள்ளார். பல மொழிக்காரர்களையும் சென்றடைந்துள்ளார். நாகலெட்சுமி சண்முகம் இவருடைய எழுத்துக்களை அழகு தமிழில் தொடர்ந்து தந்து வருகிறார்.

படிக்க முடிந்தவர்கள் புத்தகம் வாங்கிப் படியுங்கள். ஒரு பெண்மணி பொறுப்பாய் வாசித்து, யூடியூப்பில் காணொலியாக தந்துள்ளார். கேளுங்கள்.

ஆசிரியர் : பிரையன் டிரேசி

பக் : 355

0 பின்னூட்டங்கள்: