> குருத்து: அரசு அதிகாரி - குட்டிக்கதை

August 26, 2008

அரசு அதிகாரி - குட்டிக்கதை




முன்குறிப்பு : இது எனது முதல் சிறுகதை. நிஜமான அனுபவம் என்பதால், எழுத எளிதாக இருந்தது. படித்துவிட்டு, பின்னூட்டமிடுங்கள். தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில், இதே மாதிரி தொடர்ந்து எழுதுவேன். உங்களுக்குத்தான் சிரமம்.
******
மணி 9.30

அலுவலகம் போய்கொண்டிருந்த பொழுது, போன் வந்தது

"சார்! நீங்க சொன்னபடியே ESI இன்ஸ்பெக்டர் நம்ம ஆபிஸ்க்கு வந்துகிட்டு இருக்கிறாராம்" ராஜ்குமார்.

நாம் ஒரு வேலை நினைத்தால், திடீர் திடீரென வேறு வேலை வருகிறது. சே!

மணி 12

அந்த கம்பெனிக்கு போய் சேர்ந்தேன். அங்கு இருந்தது பி.எப் இன்ஸ்பெக்டர்.

விறைப்பாக தொடர்ச்சியாக கேள்விகள் கேட்டார்.



"எல்லா ரிஜிஸ்டர்ஸ் எடுங்க! கேஷ் புக் எடுங்க! பேலன்ஸ் சீட் எடுங்க! வாடகை ஒப்பந்தத்துல வேற பெயர். EB அட்டையில் வேறு பெயர். இது நீங்க தயாரிச்ச அட்டன்டன்ஸ், சம்பள ரிஜிஸ்டர். உண்மையானதை எனக்கு காட்டுங்க!"

சந்தோசமாயிருந்தது. இப்படித்தான் சீரியசா, கரெக்டா இருக்கனும். என மனசுக்குள் நினைத்தேன்.

அந்த நிறுவனத்தின் முதலாளி கரடி ராஜ்குமார் திருதிருவென விழித்தான்.

"எல்லாம் ஆடிட்டர் ஆபிஸில் இருக்கு சார்!" என்றான்

"இப்படித்தான் எல்லாரும் சொல்றீங்க! பி.எப். அப்ளை பண்ணியிருக்கீங்க! பரிசோதிக்க எல்லாம்
தயாரா இருக்கனுமா! இல்லையா! இப்ப எல்லாத்தையும் எடுத்துக் காட்டலைன்னா நான் ரிப்போர்ட் எழுதிடுவேன். உங்களுக்கு பி.எப். நம்பர் கிடைக்காது. - இன்ஸ்பெக்டர் சிங்கம் கர்ஜித்தது.

சிங்கம் சொல்கிற படி, எல்லாம் தயாரித்தது தான். 1 வருடத்துக்கு முன்னாடியே பி.எப். நம்பர்
வாங்கியிருக்க வேண்டும். வாங்கவில்லை. அப்புறம் எடுத்துக்கலாம்-னு கரடி மிச்சம் பிடித்தது.

அவசர வேலையால், அங்கிருந்து நகர்ந்தேன். 1 மணி நேரம்.

மணி 1.30

என்ன ஆச்சோ! சிங்கம் கரடியை கடிச்சு துப்பிக்கிட்டு இருக்குமோ! என வேகமாய் போனேன்.



கரடியும், சிங்கமும் மிலிட்டரி ஹோட்டலில் ஆடு, கோழிகளைத் தின்றுவிட்டு, சிரித்துப் பேசி வந்து கொண்டிருந்தன.

கோபமாய் இருந்த சிங்கத்தின் முகம் சாந்தமாய் மாறியிருந்தது.

கரடியைத் தனியாய் அழைத்து ரகசியம் கேட்டேன். 5 ஆயிரம் கொடுப்பதென பேசி முடிக்கப்பட்டதாம்

வீடு திரும்பும் பொழுது, இதே பாண்டி சிங்கம் போல தேவ சிங்கம், சசி சிங்கம், குரு சிங்கம்,
லோக சிங்கங்கள் எல்லாம் வரிசையாய் மனதுக்குள் வந்தன.

பாண்டி சிங்கம் இங்கு. மற்ற பி.எப். சிங்கங்கள் எங்கு வேட்டையாடிக் கொண்டு இருக்கிறனவோ?

குளிர் காய்கிற கரடிகள். பாவம் ஊழியர்கள்.

*******

பின்குறிப்பு : இது உண்மைச் சம்பவம். CBI - லஞ்சம் வாங்கினால், தெரியப்படுத்துங்கள் என சமீபத்தில் எனக்கு SMS அனுப்பியது. எனக்கு வேறு வேலை வாங்கித்தருவதாய் இருந்தால், நான் அப்ரூவராய் மாறத்தயார்.

3 பின்னூட்டங்கள்:

Bee'morgan said...

//
எனக்கு வேறு வேலை வாங்கித்தருவதாய் இருந்தால், நான் அப்ரூவராய் மாறத்தயார்.
//
இதுதான் டாப்.. :)

செங்கதிர் said...

பிரமாதம், அப்படியே Maintain பண்ணுங்க..

Arasu Balraj said...

நன்று. சிபிஐ சிங்கங்களை நம்பி அவசரப்பட்டு அப்ரூவராகி விடாதீர்கள்!