> குருத்து: வெள்ளி விருது : நன்றிகளும்! வாழ்த்துகளும்!

January 17, 2010

வெள்ளி விருது : நன்றிகளும்! வாழ்த்துகளும்!



தமிழ்மண விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஒரு பிரிவில் குருத்து தளத்திற்கு இரண்டாம் பரிசு வெள்ளி கேடயம் அளித்திருக்கிறார்கள். வாக்களித்தவர்களுக்கு நன்றியும், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

குருத்து தளத்திலிருந்து..

பெண்கள் பிரச்சனைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்... பிரிவில்..

"என் பெயர் பிரேமா" - ஒரு உண்மை கதை

செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில்

ஜகதீஷ் டைட்லர் விடுதலையும்! சிதம்பரத்தின் மீது ஷீ வீச்சும்!

மேற்கண்ட இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன். பொதுவாக போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் எப்பொழுதுமே இருப்பதில்லை. அதனால் தான் 2008-ம் ஆண்டு போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிப்பது: எழுதிய பதிவுகளில் "தேறுவதை" கண்டுபிடிப்பது போன்ற "சிரமமான" வேலைகள் தான் காரணம்.

பொதுவாக எழுதும் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. படிக்கிறவர்கள் மனதிற்குள் திட்டுகிறார்களா? அல்லது உருப்படியா எழுதறான்யா! என பாராட்டுகிறார்களா என்பதை அறிய முடிவதில்லை. ஹிட்ஸ்-ஐ வைத்து படிக்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த போட்டியில் கலந்து கொண்டால்... பலரும் படிப்பார்கள். நம் எழுத்தின் தரத்தை உரசிப்பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தான், இறுதி நேரத்தில் விண்ணப்பித்தேன். முதல் சுற்றில் பதிவர்கள் வாக்களித்து இரண்டு பிரிவுகளிலும் பத்தில் ஒன்று என்ற முன்னிலைக்கு வந்ததும், ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆரோக்கியமாக எழுதும் பதிவுகளுக்கு மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்..

இன்றைக்கு வெள்ளி கேடயம் பரிசு கிடைத்திருப்பது, நான் பற்றி பிடித்திருக்கின்ற "மார்க்சியம்" என்ற சித்தாந்தத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக புரிந்து கொள்கிறேன்.

பதிவுலகில் தினந்தோறும் புதியவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட தமிழ்மண விருதுகள் ஆரோக்கியமாக எழுதுவதை கண்டிப்பாக உற்சாகப்படுத்தும். இதற்காக தமிழ்மணத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துகொள்கிறேன்.

1 பின்னூட்டங்கள்:

ஊர்சுற்றி said...

தமிழ்மண விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். :)