> குருத்து: மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறது!

April 26, 2011

மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறது!


மகரஜோதியை பார்ப்பதற்காக 15 லட்சம் பேர் கடந்த ஜனவரியில் கூட்டம் கூட, ஒரு சிறு விபத்தினால், களேபரமாகி நெரிசலில் மிதிபட்டு 102 பேர் செத்துப்போனார்கள். 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள்.

கேரள பகுத்தறிவாளர்கள் சங்கம் மகரஜோதி மனிதர்களால் குறிப்பாக அரசும், ஐயப்பன் கோவில் தேவசம் போர்டும் சேர்ந்து தான் கொளுத்துகிறார்கள். அதையே புனித ஜோதி என கதைவிடுவதால் தான், இவ்வளவு கூட்டம் கூடுகிறது. ஆகையால் அரசும், தேவசம் போர்டும் விளக்கமளிக்க வேண்டும் என மூன்று மனுக்களை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

எவ்வளவு பேர் செத்தால் எனக்கென்ன? என்பது போல அலட்சியமாக, மகரஜோதி மத நம்பிக்கை. ஆகையால், அரசு விசாரிக்க விரும்பவில்லை என ஆளும் மார்க்சிஸ்ட் அரசு பதில் சொல்லிவிட்டது.

நேற்று ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு, மகர ஜோதி பொன்னம்பல மேடு அருகே பழங்குடி மக்கள் தான் ஏற்றிவருகிறார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய பிறகும், அவர்களுடைய வாரிசுகள் குறிப்பிட்ட நாளில் அங்கு சென்று மகரஜோதி ஏற்றி வருகிறார்கள் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.

இன்றைய தினமலர் இந்த மேலே உள்ள செய்தியை அப்பட்டமாக மறைத்துவிட்டு, மகரஜோதி வானில் தோன்றும் நட்சத்திரம். அது இயற்கையாக தோன்றுகிறது என பிரமாண பத்திரத்தில் சொல்லியது போல கதை விட்டிருக்கிறது.

மகரஜோதி டுபாக்கர் என தெரிந்த பிறகும், மக்கள செல்லாமலா இருக்கப்போகிறார்கள்? மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் எழுதியுள்ள இந்த கட்டுரை இதன் பின்னணியை ஒரு சமூக ஆய்வு கண்ணோட்டத்துடன் விவரிக்கிறது. வாசியுங்கள்.

தொடர்புடைய சுட்டிகள் :


மகரஜோதி பொய்! - தோழர் மருதையன்

மகரஜோதி சர்ச்சை - கேரள அரசு பதில்

0 பின்னூட்டங்கள்: