> குருத்து: தோழர் ஜவஹருக்கு அஞ்சலி!

June 19, 2021

தோழர் ஜவஹருக்கு அஞ்சலி!


நேற்று காலையில் எழுந்து வாட்சப் பார்த்ததும், தோழர் ஜவஹர் இறந்த செய்தி நம்ப முடியாததாக இருந்தது. அந்த செய்தியை பிரமைப் பிடித்தது போல பார்த்துக்கொண்டே இருந்தேன். எந்த வேலையும் ஓடவில்லை. கொரானா நம்மை ஒன்றும் செய்தது என மக்கள் நம்புவது போல, கொரானா தன்னை எதுவும் செய்யாது என அவர் எங்களை நம்ப வைத்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ”எதுவும் அபாயகரமான அறிகுறிகள் இல்லை. வீட்டிற்கு மீண்டும் திரும்பி வந்துவிடுவேன்” என சொல்லியிருந்தார். நாங்கள் முழுதாய் நம்பினோம்.


முதல் அலையில் பூர்ணம் அம்மாளின் இழப்பு பேரிழப்பாக இருந்தது. இரண்டாவது அலையில் தோழர் ஜவஹரின் இழப்பு இன்னும் பேரிழப்பாக இருந்தது.

ஈபதிவு செய்து நானும் மகாவும் பெசண்ட் நகர் இடுகாட்டில் வேனில் இருந்த தோழரை பார்த்தப் பொழுது உணர்ச்சிப் பெருக்கில் கண்களில் கண்ணீர் நிறைத்தது. எப்பொழுதும் உற்சாகமாய் “என்னப்பு? எப்படி இருக்கீங்க?” அன்புடன் விசாரிக்கும் தோழர் அமைதியாக படுத்திருந்தார்.

தோழர்கள் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்கள். அஞ்சலி செலுத்தினார்கள். அவரை மின் தகனத்தில் வைப்பதற்கு உள்ளே எடுத்து செல்லும் பொழுது, அதைப் பார்க்கும் தைரியம் எனக்கில்லை. அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டோம்.

அங்கிருந்து கிளம்பிய பிறகு, தோழரைப் பற்றிய நினைவுகள் மெல்ல மெல்ல எழுகின்றன.

எழுதுவேன்….

0 பின்னூட்டங்கள்: