> குருத்து: தேசம் கடக்கும் முதலாளிகளும் தற்கொலையால் சாகும் விவசாயிகளும்!

November 26, 2009

தேசம் கடக்கும் முதலாளிகளும் தற்கொலையால் சாகும் விவசாயிகளும்!


பாட்ஷா படத்தில் ஒரு காட்சி!

மாணிக்கத்திற்கும் (ரஜினி) அப்பாவிற்கும் (விஜயகுமார்)க்கும் உரையாடல்.

"ஏதோ நீ என் பிள்ளைன்றதால தப்பிச்சே!"

பதறிப்போய், ரஜினி "அப்ப அனவர்?" என்பார்.

'அவ்வளவு தான்" என வார்த்தையை முடிக்கிற பொழுது....

அன்வரை சுற்றி நின்று வில்லனின் ஆட்கள் கொடூரமாக வாளால் வெட்டிக்கொண்டிருப்பார்கள்.

நிற்க!

***

அன்வரை போல அநாதையாய், இந்திய அரசால் கைவிடப்பட்டவர்களாய் இந்த நாட்டின் விவசாயிகள் கொத்து கொத்தாக தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். (மறைமுகமாக) கொலை செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்)

இந்நாட்டில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகள் அமுல்படுத்த துவங்கி 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிவிட்டன. கடந்து வந்த பாதையெங்கும் விவசாயிகளின் பிணங்கள். (அரசு தரப்பே 1 லட்சத்திற்கும் மேலாக தற்கொலை என ஒப்புக்கொண்டுள்ளது - 8 மணி நேரத்திற்கு 1 தற்கொலை).

இந்த ஆண்டில் நவம்பர் இன்றைய தேதி வரைக்கும் 892 விவசாயிகள் தற்கொலை. மராட்டியத்தின் விதர்பா மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 6 பேர் தற்கொலை (தினமணி - 27/11/2009 - பக். 10)

மரபணு மாற்ற விதைகள், உரங்களின் கட்டுபடியாகாத விலை, அரசு கடன், அதன் மீதான வட்டி, கந்து வட்டி கும்பலிடம் கடன், இப்படி பல மலைகளை கடந்து, விளைச்சல் விளைந்து, துன்பம் தொலையும் நினைக்கும் பொழுது, பருவநிலை மாற்றம், விளைச்சல் பல்லிளிப்பது, விளைச்சல் வந்தாலும், உரியவிலை கிடைக்காதது என்பதில் விவசாயிகள் துவண்டு போகிறார்கள்.

இதே இந்தியாவில், இன்னொரு புறம், தரகு முதலாளிகளின் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது. காரணம் - அரசு இவர்களை செல்லப்பிள்ளையாக நடத்துகிறது.

கடந்த பல ஆண்டுகளாக பெருமுதலாளிகள் வங்கிகளில் வாங்கிய கடன் 'வராக்கடன்' என தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் ஜப்தி, கைது நடவடிக்கைகளை தரகு முதலாளிகளுக்கு, பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிராக அரசு எடுக்க மறுக்கிறது.


39000 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி, 20000 கோடி ரூபாய் சுங்கவரி, கலால் வரி, சேவை வரி என நிலுவையாக உள்ளதை அரசு கறாராக வசூலிக்க மறுக்கிறது.

இது தவிர, (2007 - 08) கார்ப்பரேட் வரி, கலால் வரி, சுங்க வரி என பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வரியில் 2.3 லட்சம் கோடி அரசால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மொத்த வரியில் இதன் பங்கு 50%. மேலும், 42100 கோடி வருமான வரியை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறடு.

இப்படி அரசு செய்கிற தள்ளுபடிகள், மானியங்கள், சலுகைகள், தன் தொழிலில் வருகிற வருமானம், வெளிநாட்டு கடன் என எல்லாம் சேர்ந்து, கடந்த சில ஆண்டுகளில், தரகு முதலாளிகள் வெளிநாட்டு நிறுவனங்களை நாளும் வாங்கி குவித்து, தேசங்கடந்த தரகு முதலாளிகளாக பரிணாமம் பெற்றிருக்கிறார்கள்.

டாட்டா குழுமம் கோரஸ் உருக்காலையை (13000 கோடிக்கு) வாங்கியிருக்கிறது. இது தவிர, டாட்டா குழுமத்திற்கு இங்கிலாந்தில் மட்டும் 18 நிறுவனங்களை வாங்கியிருக்கிறார்கள். பிர்லா குழுமத்திற்கு ஆஸ்திரேலியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இரும்பு தாது சுரங்கங்கள் இருக்கின்றன.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, விவசாயிக்கு வட்டியை தள்ளுபடி செய்தாலோ, கடன் தள்ளுபடி செய்தாலோ இங்குள்ளவர்கள் முனகுகிறார்கள். அரசுக்கு இதே வேலையா போச்சு! என சலித்துக்கொள்கிறார்கள். அறியாமை கூட வன்முறை தான்.

தொடர்புடைய சுட்டிகள் :

2 ஆண்டில் 143 அமெரிக்க நிறுவனங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கி சாதனை - தமிழ் தேசம்

Tata steel gets corus boost, net at Rs. 12322 Cr. - Financial Express


One Farmer's sucide Every 30 minutes - பத்திரிக்கையாளர் சாய்நாத்

2 பின்னூட்டங்கள்:

ஈரோடு கதிர் said...

//அறியாமை கூட வன்முறை தான்.//

அறியாமலே இருக்க நினைப்பது அதனினும் கொடுமை

செங்கதிர் said...

innum anaiththu makkalidam intha unmaikalai ellam eduththu sella vendum thozhar.