நாயகன் கொச்சியில் ஒரு புகழ்பெற்ற உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். முதல் காட்சியிலேயே அவருக்கு இதய மாற்று சிகிச்சை நடைபெறுகிறது. அது பூனேவில் இருந்த, ஒரு விபத்தில் மரணமடைந்த ஒரு இராணுவ அதிகாரியின் இதயம். மெல்ல மெல்ல தேறிவருகிறார். நாயகன் கொஞ்சம் சிடு சிடு பேர்வழி. உணவகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் கண்டிப்புடன் நடத்துகிறார்.
இந்த வேளையில், இதயம் தந்த இராணுவ அதிகாரியின் மகள் தன் திருமணத்திற்கு உணர்வுப்பூர்வமாக அழைக்கிறாள். முதலில் தன் இயல்பில் மறுக்கும் நாயகன், நாயகியின் அழைப்பில் செல்கிறார். அங்கு போனால், திருமணம் ஒரு பிரச்சனையில் நின்றுபோகிறது. அங்கு நடந்த களேபரத்தால், நாயகனுக்கு கொஞ்சம் முதுகு பிரச்சனையால், சில நாட்கள் அங்கு தங்க நேரிடுகிறது.
அங்கு இருக்கும் நாளில் அவன் இயல்பில் மாற்றம் நடைபெறுகிறது. அதன் பின் என்ன ஆனது என்பதை மெல்ல மெல்ல உணர்வுப்பூர்வமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
***
பழைய கதை. இந்த இயல்பில் சில கதைகள் நினைவுக்கு வந்து போகின்றன. அதே பழைய டெம்ளட்டிலேயே காட்சிகளும் நகர்வதால், அத்தனை ஈர்ப்பில்லை.
கதை பெரும்பாலும் பூனே என்பதால் புதிய இடங்களாக இருந்தன. மற்றபடி நாயகன் மோகன்லால், நாயகியாக மாளவிகா மோகன், பூவே உனக்காக சங்கீதா என கதையை நகர்த்துவதில் துணைநின்றிருக்கிறார்கள்.
இயக்குநர் சத்யன் அந்திக்காடு பழைய ஆள். அவருடைய மகன் எழுதிய கதை என்கிறார்கள். ஆனால் ஈர்ப்பில்லை.
சுமாரான படம். திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment