> குருத்து: நான் போகிறேன் மேலே மேலே!

March 29, 2020

நான் போகிறேன் மேலே மேலே!

அழகான கடற்கரையின் பின்னணியில் காதலர்கள் பாடும் பாட்டு. தாமரை தன் பேனாவில் காதலை தொட்டு தொட்டு எழுதியிருப்பார் போல! காதலர்களின் உணர்வை சொல்லும் இயல்பான காதல் வரிகள்!

பல இரவுகள் இந்த பாடல் தாலாட்டியிருக்கிறது. எஸ்.பி.பி மகன் தயாரித்த படம் என்பதால் யுவன் தான் இசைத்திருப்பார் என அழுத்தமாய் நம்பினேன். பகலில் தேடிப்பார்த்தால்... 'சுப்பிரமணியபுரம்' இசைத்த ஜேம்ஸ் வசந்தன். மன்னியுங்கள். எங்கே போனீர்கள் வசந்தன்?

எஸ்.பி.பியும் சித்ராவும் பாடலை அடுத்தக்கட்டத்திற்கு மேலே கொண்டு போயிருப்பார்கள். காட்சிகளின் வழியே தாளத்திற்கேற்ப பூக்கோலங்கள் வந்து வந்து போகும்! அழகு!

ஒருமுறை கேளுங்கள். நாள் முழுவதும் இந்த பாடல் உங்களை பின்தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்! 


0 பின்னூட்டங்கள்: