> குருத்து: சரஸ்வதி மெஸ் (வீட்டு சாப்பாடு)

March 17, 2020

சரஸ்வதி மெஸ் (வீட்டு சாப்பாடு)

மதுரை மணத்துடன் காலையில் டிபன், மதியம் சாப்பாடு சாப்பிட வேண்டுமென்றால், சரஸ்வதி மெஸ்க்கு ஒருமுறை போய் சாப்பிட்டு பாருங்கள். நல்ல சாப்பாடு. கடை போர்டில் போட்டது போலவே வீட்டு சாப்பாடு போலவே நன்றாக இருக்கும். அந்த பக்கம் சில மாதங்களுக்கு ஒருமுறை போகும் பொழுதெல்லாம் சாப்பிட்டுவிடுவேன்.

சின்ன ஹோட்டல் தான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்தாலே, அதிகப்பட்சம் 8 பேர் தான் உட்கார்ந்து சாப்பிடமுடியும். எட்டுக்கு எட்டு அறையில் சாப்பாடு தயாராகிறது. இன்னொரு எட்டுக்கு எட்டு அறையில் பரிமாறுகிறார்கள். ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் தான் கடையை நடத்துகிறார்கள்.

மதியம் சாப்பாட்டுக்கு சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர் உண்டு. மீன் குழம்பும் உண்டு. ரூ. 60. கூடுதலாக‌ ஆம்லேட் மட்டும் கிடைக்கும்.

பல நாட்கள் இரவு அந்த பக்கம் வரும் பொழுதெல்லாம் கடையை பார்ப்பதுண்டு. கடை மூடியிருக்கும். பிறகு தான் தெரிந்தது. காலை, மதியம் மட்டும் தான் கடை!

கோயம்பேட்டிலிருந்து விருகம்பாக்கம் போக கோயம்பேட்டிலிருந்து பின்பக்கம் சின்மயா நகர் வழியாக ஒரு சாலை உண்டல்லவா! அந்த சாலையில் போனால், ஆற்காடு சாலையை தொடுவதற்கு முன்பே ஒரு மார்க்கெட் ஒன்று இருக்கும். அந்த முதன்மை சாலையிலேயே இருக்கிறது. கருமாரியம்மன் திரையரங்கு அருகே என்றும் சொல்லலாம்.

வாய்ப்பிருப்பவர்கள் போய் சாப்பிட்டு பாருங்கள்! மதுரை மணம் என்பது தான் பிரதானமானது! 

0 பின்னூட்டங்கள்: