> குருத்து: கண்ணை நம்பாதே (2023)

March 23, 2023

கண்ணை நம்பாதே (2023)


 நாயகன் குடியிருந்த வீட்டு ஓனரின் பெண்ணை காதலித்தது தெரிய வந்ததால், ”உடனே காலி செய்! இல்லையென்றால் எல்லாவற்றையும் தெருவில் எறிந்துவிடுவேன்” என அடம்பிடிக்கிறார்.

அவசர கதியில் ஒரு வீட்டில் குடியிருக்கும் இளைஞருடன் போய் செட்டிலாகிறார். அன்று இரவு உடல்நலம் சரியில்லாத ஒரு மத்திய வயது பெண்ணுக்கு நாயகன் காரோட்டி உதவுகிறார். உடன் இருக்கும் இளைஞர் நாயகனுக்கு தெரியாமல் அதில் ஒரு பெரிய சிக்கலை உண்டாக்குகிறார்.


ஒரு தப்பை மறைக்க இன்னொரு தப்பு. அதை மறைக்க இன்னொரு தப்பு என போகிறது. பிறகு என்ன ஆனது என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
***

நாயகன் பூங்காவில் உட்கார்ந்து யாரும் பார்க்கிறார்களா இல்லையா என்பதை கூட கவனிக்காமல் வடிவேல் நகைச்சுவைக்கு விழுந்து விழுந்து சிரிக்கிற லேசான ஆள். அதனால் முன்பின் தெரியாத ஆள் மீது சந்தேகமே அவரால் படமுடியவில்லை. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போகிறார். ஆங்காங்கே கொஞ்சம் புத்திசாலித்தனத்துடனும் நடந்துகொள்கிறார்.

இப்படி சின்ன சின்ன லாஜிக் மீறல்கள் இருந்தாலும், கடைசி வரை பார்வையாளர்களை போராடிக்காமல் கொண்டு போயிருக்கிறார்கள்.என்பேன்.

நாயகனாக உதயநிதி, பிரசன்னா, புதுமுக நாயகி ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பூமிகா, மாரிமுத்து என பலரும் படத்தை காப்பாற்றியிருக்கிறார்கள். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் இயக்குநர் மாறன் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இப்பொழுது திரையரங்குகளில் ஓடுகிறது. விரைவில் ஓடிடிக்கு வரும்.

0 பின்னூட்டங்கள்: