> குருத்து: மிட்டாய் கதைகள் – கலீல் ஜிப்ரான்

December 16, 2022

மிட்டாய் கதைகள் – கலீல் ஜிப்ரான்


சின்ன சின்ன கதைக்களுக்குள் பெரிய கருத்துக்களை ஒளித்துவைத்திருக்கும் கதைத் தொகுப்புதான் இந்த மிட்டாய் கதைகள்.


இவற்றைச் சிறுகதை என்று கூட சொல்ல இயலாது. ஒவ்வொன்றும் சின்ன சின்ன பட்டாசுகள். சில கதைகள் புன்னகைக்க வைக்கின்றன. சில கதைகள் வெடித்துச் சிரிக்க வைக்கின்றன. (கலீல் ஜிப்ரானை படித்தால்... இப்படி எல்லாம் எழுத வைத்துவிடுவார்.)

தொகுப்பில் 50 கதைகள் இருக்கின்றன. இந்த கதை தான் முதலாவதாக இருக்கிறது. அது தான் எனக்கு மிகவும் பிடித்தனமானவையாகவும் ஆகிவிட்டது. இந்தக் கதை பல விசயங்களை சொல்லாமல் சொல்லி செல்கிறது.

காலைப் பனிப்போல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் 'நான் ரொம்ப சுத்தமானவனாக்கும்' என்று அலட்டிக்கொண்டது.

'நான் பிறக்கும்பொழுதே தூய்மையாகப் பிறந்தேன். காலம் முழுவதும், நான் நான் இவ்வாறே தூய்மையாக இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலாக்கினாலும் பரவாயில்லை, பொறுத்துக் கொள்வேன். ஆனால் கறுமையின் இருள் கைகள் என்னைத் தொட அனுமதிக்கமாட்டேன், தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில்கூட வரமுடியாது'.

இந்தப் பேச்சைக் கேட்ட மைப்புட்டி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுகட்டிக் கொண்டது.

பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன. அவையும், அந்தக் காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும், கற்போடும் வாழ்ந்தது.
வெறுமையாகவும்.

ஆசிரியர்: கலீல் கிப்ரான் (1883 - 1931) லெபனான்

தமிழாக்கம்: என். சொக்கன்

பக்கங்கள் : 96

0 பின்னூட்டங்கள்: