> குருத்து: அதிகாலையின் அமைதியில் - நாவல்

January 3, 2023

அதிகாலையின் அமைதியில் - நாவல்


“ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், இவர்கள் மனிதர்கள் அல்ல, மக்களும் அல்ல, விலங்குகளும் அல்ல, பாசிஸ்டுகள். ஆகவே, இவர்களை இந்த நோக்கோடு பார்.”

- நாவலிலிருந்து…
****

சோவியத் ரசியா. ஏகாதிப்பத்தியங்கள் தங்களுக்குள் நாடு பிடிக்கும் போட்டி தான் இரண்டு உலகப்போர்களுமே. தோழர் ஸ்டாலின் இரண்டாம் உலகப் போரில் இருந்து ரசியாவை காக்கவேண்டும் என பல வழிகளில் முயன்றார். ஆனால், வளர்ந்த ஏகாதிப்பத்திய நாடுகள் இட்லரை ரசியாவிற்குள் திருப்பிவிட்டார்கள். இந்த போரில்ன் ரசியா, ஜெர்மனி இரண்டு பேரும் ஒழிந்தாலும் நல்லது. யாராவது ஒரு ஆள் ஒழிந்தாலும் நல்லது என கணக்குப் போட்டார்கள். 1942 காலக்கட்டத்தில் போரின் பின்னணியில் உள்ள ஒரு களம் தான் இந்த நாவல்.

எல்லையோர காவல் படை அது. ஐந்து பெண்கள், ஒரு ராணுவ தளபதி என மொத்தம் ஆறு பேர். அவர்களிடம் இருக்கும் துப்பாக்கிகளும் மிக சாதாரணமானவை. நம்மூரைப் போல பட்ஜெட்டில் பெரும் பகுதியை இராணுவத்துக்கு எல்லாம் ஒதுக்குவதில்லை. போர்க்காலம் வேறு.

ஆறு பேரும் ஒரு சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். ரஷ்யாவில் அழிவு வேலையைச் செய்வதற்காக , சக்தி வாய்ந்த வெடி குண்டுகளுடன், துப்பாக்கிகளுடன் ஜெர்மானியர்கள் ஒரு குழுவாக காட்டு வழியே ரஷ்யாவுக்குள் ஊடுருவுகின்றனர். அவர்களை சாதாரண ஆயுதங்களோடு இருந்த இந்த ஆறு பேரும் தடுத்து நிறுத்தினார்களா என்பது தான் முழு நீளக்கதையும்.

போரில் ரசியா இரண்டு கோடி பேரை இழந்து, உலகத்தை இட்லர் என்ற பாசிஸ்டிடம் இருந்து காத்தது. இந்த நாவலில் வரும் எளிய பின்னணியில் வந்தவர்கள் தான் தங்கள் உயிர்களை கொடுத்து, உணர்வோடு போரிட்டார்கள். அதனால் தான் பல கோடிகளை இராணுவத்திற்கு கொட்டி நவீன படைகளை வைத்திருந்தாலும் ஜெர்மன் இட்லர் தோற்றான்.

அருமையான நாவல். இந்த கதையை எடுத்துக்கொண்டு தான், இயக்குநர் ஜனநாதன் ”பேராண்மை” படத்தை எடுத்தார். படம் வணிக சமரசங்களுடன் எடுக்கப்பட்டிருக்கும். பெரிய வெற்றி பெற்றது.

ரஷ்ய மொழியில் ”The Dawns are quiet here” (விடியல்கள் இங்கே) என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது.

நல்ல உணர்வுப்பூர்வமான நாவல். படியுங்கள்.

ஆசிரியர் : பரீஸ் வஸீலியெவ்

தமிழில் : பூ. சோமசுந்தரம்

பக்கங்கள் : 100

விலை : ரூ. 160
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

0 பின்னூட்டங்கள்: