> குருத்து: தூக்கு மேடை குறிப்புகள்

January 3, 2023

தூக்கு மேடை குறிப்புகள்


 “மக்களே! உங்கள் எல்லோரையும் நான் நேசித்தேன்… உஷாராக இருங்கள்”

- ஜூலியஸ் பூசிக்
***

இரண்டாம் உலகப்போர் காலகட்டம். இட்லர் நாடுகளை எல்லாம் போர் தொடுத்து தன் ஜெர்மனியின் ஆளுகைக்குள் கொண்டு வந்த காலம். செக்கோஸ்லோவியாவையும் அவன் பிடித்தான். ஏற்கனவே இருந்த அரசு கம்யூனிஸ்டுகளை ஒடுக்கிக்கொண்டிருந்தார்கள். ஜெர்மன் படைகள் இன்னும் தீவிரமாய் கம்யூனிஸ்டுகளை வேட்டையாட துவங்கியிருந்தார்கள்.

ஒரு வீட்டில் ஜூலியஸ் பூசிக்கும் உடன் இருந்த தோழர்களும் கொலைகார ஜெர்மன் படையால் கைது செய்யப்படுகிறார்கள். சிறையில் சித்திரவதை. மேலும் சித்திரவதை. எல்லாவற்றையும் எதிர்கொள்கிறார்கள். இன்னும் புதிய தோழர்கள் சிறைக்குள் வந்து சேர்கிறார்கள். யார் அந்த துரோகி என கணித்துவிடுகிறார். ஒரு சமயத்தில் அவருடைய அன்பு துணைவியாரை அழைத்து வந்து யார் என கேட்கிறார்கள். தெரியாது என்கிறார்.

சிறை அனுபவங்களையும், தனது எண்ணங்களையும், சிறைக்காவலரிடம் குறிப்புகள் எழுதி தருகிறார். செப்டம்பர் மாதம் எட்டாம் நாள் 1943, பெர்லினில் பூசிக் தூக்கிலிடப்படுகிறார்.

அவருடைய துணைவியார் கைகளில் அந்தக் குறிப்புகள் கிடைத்து புத்தகமாக வெளியே வந்தது. உலகத்தின் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்து, இன்றைக்கும் தொடர்ந்து வாசிக்கப்படுகிறது.

பூசிக் பத்திரிக்கை ஆசியராக இருந்தவர். அதனால் அவருடைய எழுத்து அத்தனை கூர்மை. வாசிக்க துவங்கினால், கீழே வைக்க முடியாத அளவிற்கு எழுதியிருப்பார். தமிழில் இஸ்மத் பாஷா அதே உணர்வுகளை அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம்.

மொழிபெயர்ப்பாளர் : இஸ்மத் பாஷா

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

பக்கங்கள் : 128

விலை : ரூ. 125

0 பின்னூட்டங்கள்: