> குருத்து: பெரியாரின் குட்டிக் கதைகள்

January 1, 2023

பெரியாரின் குட்டிக் கதைகள்


பெரியார் தன் எழுத்தில், பேச்சில் சொன்ன குட்டிக் கதைகளை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். பெரும்பாலான கதைகள் மூட நம்பிக்கைகளை, கடவுளர் கதைகளை கேள்வி எழுப்புகிற பகுத்தறிவு கதைகள், பொய் வாக்குறுதிகள் தரும் தேர்தல் கட்சிகளை, சமகால சம்பவங்களை கேலி, கிண்டல் செய்கிற கதைகளாக இருக்கின்றன.


ஒரு வயதான பார்ப்பன வக்கீல் இருந்தாராம். அவருக்கு நிறைய பெண் பிள்ளைகள். ஒரு பையனாம். தன்னுடைய வருமானத்தில் ஒவ்வொரு பெண்ணாக திருமணம் முடித்துக்கொடுத்துவிட்டாராம். கடைசிப் பெண் மட்டும் இருந்தாளாம். ஒரு நாள் உடல் நிலை முடியவில்லை. தன் வக்கீல் மகனிடம் கேசு கட்டை கொடுத்து ”போய், வாய்தா வாங்கிவா!” என்றாராம். அவன் போய் வந்து, ”பல நாட்கள் இழுத்த கேசை நான் ஜெயித்து வந்துவிட்டேன்” என பெருமையாய் சொன்னானாம். அவர் பதறி ”உன் கடைசி தங்கச்சியை இந்த வழக்கை வைத்து தாண்டா கரையேத்தலாம் என நினைச்சேன். காரியத்தை கெடுத்திட்டியே!” என்றாராம்.

சுருட்டுப்பாயும், முரட்டு பெண்டாட்டியும்!

ஒரு சுருட்டுப்பாயும், முரண்டு பிடிக்கிற பெண்டாட்டியும் இருந்தார்கள். அவளை கையைப் பிடித்து அழைத்து வந்தால் பாய் சுருண்டுகொள்ளுமாம். பாயை சரி செய்து, பொண்டாட்டிப் பார்த்தால் எங்கேயோ இருப்பாளாம். இந்த போராட்டத்திலேயே விடிந்தும்விட்டதாம். அப்படி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்த பேச்சுவார்த்தையை கிண்டலடித்திருக்கிறார்.

தேர்தலில் நிற்க தான் திமுக திகவை விட்டு பிரிந்தது. இப்பொழுது தேர்தலுக்கு வந்துவிட்டது பார்த்தீர்களா என கேலி செய்திருக்கிறார்.

பார்ப்பன வக்கீல் தனது சாதிக்காரனான நீதிபதியைப் பார்க்கும் பொழுது கெஞ்சுவார்களாம். “தீர்ப்பு என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள். அதைச் சொல்லும் பொழுது உன் வக்கீல் மூஞ்சிக்காக தான் இவ்வளவோடு விட்டேன் என சொல்லுங்கள். நான் பிழைத்துக்கொள்வேன்.”

1920 லிருந்து 1970 வரைக்குமான கால வரிசையில் பல கதைகள் இப்படி இருக்கின்றன. படியுங்கள்.

தொகுத்தவர் : புலவர் நன்னன்

பக்கங்கள் : 92

விலை: ரூ. 30

0 பின்னூட்டங்கள்: