> குருத்து: ஒரு கேள்வி

April 28, 2020

ஒரு கேள்வி

இன்றைய தினகரனில் ஒரு செய்தி படிச்சேன். கொழும்புல இருந்து இரண்டு பேர் ஏர் இண்டியா விமானத்தில சென்னைக்கு வர்றாங்க! பிறகு மெட்ரோ ரயில்ல போவதற்காக, பேக்கை ஸ்கேன் செய்ய வைக்கிறாங்க! உள்ளே வைச்சிருந்த தங்கத்தை காட்டிக்கொடுக்குது! உடனே போலீசுக்கு தெரியப்படுத்தி, கடத்தல் தங்கம்னு வந்து புடிச்சிட்டு போயிட்டாங்க!

அவங்கள விசாரிச்சதுல இன்னும் இரண்டு பேர் தங்கம் கடத்தி வர தகவலை சொல்றாங்க! அவங்களையும் பிடிச்சு சோதிச்சதுல, மொத்தம் நாலு பேர்கிட்ட இருந்தும் ஒரு கோடிக்கு மேலே தங்கத்தை கைப்பத்திட்டாங்க!
இதிலிருந்து என்ன தெரியுது?

சர்வதேச விமான நிலையத்தில கண்டுபிடிக்க முடியாத தங்கத்தை, மெட்ரோ ரயில் ஸ்கேன் கண்டுபிடிச்சுருச்சு!

உள்ளே லஞ்சம் கொடுத்து தப்பிச்சுட்டாங்க! வெளியே லஞ்சம் கொடுக்காததால மாட்டிக்கிட்டாங்கன்னு சொல்லலாமா? :)




- முகநூலில் ‍ 09/12/2019

0 பின்னூட்டங்கள்: