> குருத்து: சிசிடியை முன்வைத்து...(2)

April 29, 2020

சிசிடியை முன்வைத்து...(2)


நேற்று மிஷ்கின் பேட்டி ஒன்று கண்ணில்பட்டது. சிசிடிவி லாஜிக் குறித்து மிஷ்கினிடம் கேள்வி கேட்கும் பொழுது...

"வண்டியை பார்க்கிங் பண்ணும் பொழுது, ஹெல்மெட்டை வண்டிக்குள்ள வைச்சு பூட்டுவீங்க! அது போல லாஜிக் கேட்கிற உங்க கேள்விகளையும் வண்டியில் வைச்சு பூட்டிட்டு வாங்க! (மூளையை கழட்டி வைச்சிட்டு வாங்க என்கிறார்). நான் ஒரு கதை சொல்றேன். அன்பு கதை. உங்க இதயம் கொண்டு பாருங்கள். புழுக்களா இருக்கிற ஒவ்வொரு கதாப்பாத்திரமும் எப்படி கடவுள்களா மாறின கதையை பாருங்க!" என்கிறார்.

மேலும் " சிசிடிவி இல்லாத இடத்தில இப்படி பண்றான்னு வாய்ஸ் ஓவர் போடனுமா! அல்லது சிசிடிவியை உடைப்பதை காட்டனுமா? (ஜெயம் ரவி நவீன தொழில்நுட்பத்தை வைத்து சிசிடிவியை ஏமாத்துவாறே! அதுபோல செய்யனுமா!) அதெல்லாம் காட்டுனா மக்களுக்கு போரடிச்சிறாது! 10 அடிக்கு ஒரு சிசிடிவி இருக்கிற லண்டனில் இன்னும் பல கடத்தல்களும், கொலைகளும் நடந்திட்டுத்தான் இருக்கு" என்கிறார்.

மிஷ்கினுக்கு ஒண்ணு புரியல! மக்கள் சிசிடிவி மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பலர் தங்கள் வீடுகளிலேயே சில ஆயிரம் செலவழிச்சு சிசிடிவியை பொருத்தியிருக்கிறார்கள். அரசும், போலீசும் நைச்சியமா பேசி, சில இடங்களில் மிரட்டி கூட திரையரங்கில், பொது இடங்களில், தொழிற்சாலைகளில் என பொருத்திக்கொண்டே வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில்...மக்கள் மனநிலை என்னவென்றால்..
"சைக்கோ ஒரு பொண்ணை தூக்கியிரலாம். இரண்டு தடவை கூட தூக்கியிரலாம். அதெப்படி வரிசையா இத்தனை பெண்களை தூக்கியிறமுடியும். அப்புறம் நாங்க இத்தனை சிசிடிவி வைச்சிருக்கிறதுக்கு என்ன மதிப்பு இருக்கு?"

மிஷ்கின் அன்பை போதிக்கிறேன். சக மனிதர்களை அன்போட அணுகுங்க! சைக்கோ உருவாவதையே தடுத்திறலாம்னு பேசறார்.

"நாங்க சொந்த பிள்ளை தப்பு பண்ணுனாலே தூக்கிப்போட்டு மிதிப்போம். எதிர்த்த வீட்டுகாரனோ அல்லது எவனோ ஒருத்தன் தப்பு பண்ணுனா கொன்னுற மாட்டோம்" என்பது தான் பலருடைய மனநிலை.

0 பின்னூட்டங்கள்: