> குருத்து: San Andreas (2015)

April 28, 2020

San Andreas (2015)


கதை. நாயகன் அமெரிக்காவில் தீயணைப்புத் துறையில் ஹெலிகாப்டரில் மீட்புப்பணி செய்யும் வேலையில் இருக்கிறார்.

அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள். அதில் இளைய மகள் ஒரு விபத்தில் இறக்கிறாள். அதில் அவருக்கும் துணைவியாருக்கும் மனக்கசப்பு ஏற்படுகிறது. ஆகையால் அவருடைய துணைவி பிரிய முடிவெடுக்கிறாள்.
இந்த சமயத்தில் சான் ஆன்ட்ராஸில் ஒரு மிகப்பெரிய பூகம்பம் ஏற்படுகிறது. முதலில் போராடி தன் துணைவியாரை காப்பாற்றுகிறார்.

பின்பு இருவரும் இணைந்து பூகம்பத்திலும், சுனாமியிலும் வேறு பகுதியில் சிக்கி கொண்ட தன் மகளை காப்பாற்றினார்களா என்பது முழுநீளக்கதை.

*****

2012 படத்திற்கு பிறகு ஒரு பூகம்பத்தை, சுனாமியை மிகப்பெரியதாக திரையில் அருமையாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை வந்த பூகம்பங்களில் அதிகப்பட்சம் ரிக்டர் அளவு கோலில் 9.3 வரை தொட்டிருக்கிறது. 2004ல் தமிழ்நாட்டை கலங்கடித்த சுனாமி வந்த பொழுது...பதிவான அளவு 9.3 தான்.

உலகத்தில் 1960ல் சிலியில் வந்தது தான் அதிகப்பட்சமானது என்கிறார்கள். பதிவான அளவு 9.6. படத்தில் 9.6 தான் வந்ததாக கதை சொல்லியிருக்கிறார்கள்.

நாயகன் ட்வைன் ஜான்சனும் மற்றவர்களும் நன்றாக செய்திருக்கிறார்கள்.
திரைக்கதை தான் பலவீனம். தீயணைப்புத்துறையில் பணியாற்றும் நாயகன் ஹெலிகாப்டரை ஓட்டிக்கொண்டு தன் துணைவியாரையும், தன் மகளை மட்டுமே காப்பாற்றுவதில் கவனமாய் இருக்கிறார். அவர் வேலை செய்யும் கடமை என்ன? அதில் என்ன போராட்டம் என்பது எங்குமே இல்லை. மொத்த நகரமும் சீட்டுக்கட்டு சரிந்தது போல உருக்குலையும் பொழுது, அதற்கு நாயகன் காட்டும் உணர்ச்சி இருக்கிறதே! அட! அட!

இந்தப்படம் வெற்றிப்பெற்றதால், இரண்டாம் பாகம் எடுப்பதாக சொல்கிறார்கள். டிரைலர் பார்த்தேன்.

0 பின்னூட்டங்கள்: