> குருத்து: (போலி) என்கவுன்டர்களை ஆதரிக்க முடியுமா?

April 28, 2020

(போலி) என்கவுன்டர்களை ஆதரிக்க முடியுமா?


"இதுதொடர்பாக ஆந்திர பிரதேச முன்னாள் காவல்துறை ஆணையர் ஸ்வரான்ஜித் சென் கூறும்போது, பொதுமக்களின் கொந்தளிப்பே போலீசாரை இதுபோன்ற முடிவு எடுக்க வைத்துள்ளது. இது முற்றிலும் சரியானது இல்லையென்றாலும், இது தான் எதிர்பார்க்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன். இதுபோன்ற ஏதாவது நடக்கப்போகிறது என்று எனக்கு தெரியும் என்று அவர் கூறியுள்ளார்."

- NDTV தமிழ், 06/12/2019

சமீபத்தில் தெலுங்கானாவில் ஒரு பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொன்றவர்கள் என நான்கு பேரை கைது செய்தார்கள்.
நாடு முழுவதும் பேசப்பட்ட இந்த கொலையை விரைந்து விசாரிக்க விரைவு கோர்ட் ஏற்றுக்கொண்டதாக இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி படித்தேன்.
இந்த சூழ்நிலையில்... இப்பொழுது அந்த நான்கு பேரும் விசாரணைக்கு அழைத்து வரும் வேளையில் தப்பி ஓடியதாகவும், போலீசு சுட்டு கொன்றதாகவும் செய்திகள் வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் இதை ஆதரித்து சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
கொலை குற்றம் சாட்டப்பட்டு போலீசு கைது செய்கிறவர்களே, குற்றவாளிகள் என எப்படி முடிவு செய்யமுடியும்?

அதில் போலீசு காசு வாங்கி கொண்டு ஏகப்பட்ட குளறுபடிகள் செய்யும். வேறு நபர்களை கூட கைது செய்யும்.

எழும்பூரில் குடித்துவிட்டு 2000 கோடி சொந்தக்காரன் பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி கொலை செய்தான். ஒரு சிறுமி படுகாயமுற்றாள்.

அதில் பணக்காரனிடம் காசு வாங்கி விட்டுவிட்டு அந்தாளிடம் வேலை செய்பவரை கைது செய்தார்கள்.

பிறகு போராடியதால்... அந்த பணக்காரனை கைது செய்தார்கள்.
போலீசும், அரசும் செய்கிற எல்லா அயோக்கியத்தனங்களையும், மக்களுக்கு வெறுப்பு இருப்பது தெரிந்துகொண்டு, இப்படி கொலை செய்வது மூலம்
நாயகனாக்கி கொள்ள முயல்கிறார்கள்.

இப்படி போலி என்கவுண்டரில் போட்டுத்தள்ளுவதன் மூலம் உண்மையை உலகுக்கு மறைத்துவிடுவார்கள். உதாரணம் : சுவாதி கொலையில் சிறையில் கொல்லப்பட்ட ராம்குமார்.

ஆகையால், எளிய மக்கள் உணர்ச்சிவயப்பட்டு ஆதரிக்கலாம்.

 ஆனால், உணர்ச்சிவயப்படாமல்... கொஞ்சம் நிதானமாக யோசித்தால் சமூகத்திற்கு நல்லது.

- 05/12/2019 - முகநூலில்...

0 பின்னூட்டங்கள்: