> குருத்து: 'அவர்களின்' கண்களில் பயம் தெரிகிறது

April 28, 2020

'அவர்களின்' கண்களில் பயம் தெரிகிறது


'அவர்களே' எதிர்பார்க்காத
இரண்டாவது வெற்றியை கண்டு ஆச்சர்யமடைந்தார்கள்.


படை, ஆயுதம், நீதி என
அனைத்தையும் பயன்படுத்தினார்கள்.
 

தன் நீண்ட வருட கனவுகளை
ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்தார்கள்.


எதிர்ப்பவர்களை
வசை மொழிந்தார்கள்.

பக்கத்து நாட்டுக்கு
போய்விடு என்றார்கள்.

சிறையில் அடைத்தார்கள்.
கொல்லவும் செய்தார்கள்.

'வெற்றிகள்' தந்த மமதையில்
கோடிக்கணக்கான மக்களை
தன் சொந்த மண்ணிலேயே
அகதிகளாக்க துணிந்தார்கள்.

மாணவர்களின் கூட்டில்
கல் எறிந்தார்கள்.
வங்கிகளில் கால்வலிக்க நின்றவர்கள்
தொழில் முடக்கப்பட்டவர்கள்
ஆலைகளில் இருந்து
துரத்தப்பட்டவர்கள்
உரிமைகள் கேட்டதற்காக
நசுக்கப்பட்டவர்கள் என எல்லோரும்
தெருக்களில் அலைஅலையாய்
வந்துகொண்டே இருக்கிறார்கள்.

ஒருமித்த குரலில் முழங்குகிறார்கள்.
துப்பாக்கிகள் சுட்டாலும்
வந்துகொண்டே இருக்கிறார்கள்.
'அவர்களின்'
படைகள் பின்வாங்குகின்றன.

குரலில் நடுக்கம் தெரிகிறது.
கண்களில் பயம் தெரிகிறது.
நாம் மேலும் மேலும்
முன்னேறுவோம்.
சமூகத்தின் அத்தனை
அழுக்குகளையும்
துடைத்தெறிவோம்.

#NoCAA
#NoNRC
#IndiaagainstCAA

- முகநூலில்... 21/12/2019

0 பின்னூட்டங்கள்: