> குருத்து: புதிய அலை

February 18, 2021

புதிய அலை

எங்கள் பகுதியில்
நிறைய வீடுகளில்
"வாடகைக்கு" என
அட்டைகள் தொங்குகின்றன.



தெரு முனைகளில்
"வீட்டு பொருட்களை
பாதுகாப்பாக மாற்றித்தரப்படும்" என‌
புதிதாய் அட்டை தொங்குகிறது.

ஊரடங்கில் மூடப்பட்ட‌
பல உணவகங்கள்
இன்னும் திறக்கப்படவேயில்லை.

அரக்கோணத்திலிருந்து
தினமும் ரயிலில் பயணித்து
தேய்த்துக்கொண்டிருந்த‌
அயர்ன்காரரை காணவில்லை.

"தற்கொலை
செய்வதை தவிர‌
வேறு வழியில்லை!" என‌
நேற்று ஒரு சிறுமுதலாளி புலம்பினார்.
இன்னும் சில காலத்திற்கு
இவரை பார்க்ககூடாது என முடிவெடுத்தேன்.

கோயில்களில்
எப்பொழுதும் போல
கூட்டம் கூட்டமாய்
சுறுசுறுப்பாய்
சானிடசைர் அடித்து
வலம் வருகிறார்கள்.

முதல் அலையிலேயே
வெகுவாக களைத்து போய்விட்டோம்.
இரண்டாவது அலை
பொங்கி வரும் என‌
இப்பொழுது அலசிக் கொண்டிருக்கிறார்கள்.
பயமாக இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: