> குருத்து: கேட்டால் கிடைக்கும்!

February 21, 2021

கேட்டால் கிடைக்கும்!


இரவு 3.30 மணி. திருப்பதியில் ஒரு வேலை. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், வண்டியை பார்க் செய்யும் பொழுது, 3 மணி நேரம் வரை ரூ. 10. ஒரு நாள் என்றால் ரூ. 40 வசூலித்தார்கள்.

பார்க் செய்துவிட்டு, திருப்பதி பேருந்து விசாரிக்கும் பொழுது தான் தெரிகிறது. வடக்கு நோக்கி செல்லக்கூடிய பேருந்துகள் "மாதவரம் மாறி மூன்று வருசங்களாச்சே!" என்றார்கள். விசேச காலங்களில் மட்டும் இப்படி பிரித்துவிடுவார்கள் என்று தான் நினைத்திருந்தேன்.
மாதவரத்திற்கு பேருந்தில் போய்விடலாம் என பேருந்தை தேடினால் உடனடியாக இல்லை. பைக்கில் போய்விடலாம் என முடிவெடுத்தேன்.
மீண்டும் வண்டியை எடுத்து பார்க்கிங்கிற்கு வந்தால், ரூ. 40யும் சரியாப் போச்சு! No Refund என கூலாக சொல்கிறார்கள்.
"இதென்னடா பகல் கொள்ளையா இருக்கு! No refundன்னு எங்க எழுதி வைச்சிருக்கீங்க காட்டு!" என்றேன்.
"இது தான் எங்க ரூல்! வேணும்னா எங்க மேனஜர்கிட்ட பேசுங்க!" என்றார்.
"வரச் சொல்லுங்க!" என்றேன்.
ஒருவர் தேடிப்போனார். அங்கு இல்லை. அவர் வேறிடத்தில் இருக்கிறார். இவர் போனில் விளக்கினார்.
"ரூ. 40 யும் கேட்கிறார்" என்றார்.
"மூணு மணி நேரத்திற்குள்ளே என்றால், ரூ. 10 தானே! அத எடுத்துட்டு மிச்சம் கொடுங்க!" என்றேன்.
பேசிவிட்டு, ரூ. 30 யை திருப்பி தந்தார்கள்.
இப்படி எத்தனை பேரிடம் பணத்தை ஏமாற்றினார்களோ! ஊரிலிருந்து வந்ததும் ஒரு புகார் கடிதம் எழுதி அனுப்பவேண்டும்.
கமிசன் ஆட்சித்தானே நடக்கிறது. அதனால் தைரியமாய் ஏமாற்றுகிறார்கள்.

0 பின்னூட்டங்கள்: