> குருத்து: லாக்டவுன் கதைகள் 3

May 23, 2020

லாக்டவுன் கதைகள் 3



 
திருப்பூர்.
முகமதுயூனுஸ்
ஆட்டோ நிலையத்தில்
அமர்ந்திருந்தார்.
25 மதிக்கத்தக்க பெண்
”இந்த செல்போனை வைத்துக்கொள்ளுங்கள்.
100 ரூ. அடமானமாக தாருங்கள்” என்றார்.


விசாரித்தால்…
“ஊரடங்கால் தன் கணவனுக்கு
வேலை இல்லை.
இரண்டு குழந்தைகளுக்கும்
பால் வாங்க கூட காசு இல்லை”
என கண்ணீருடன் தன் கதை சொன்னார்.

செல்போனை
அவரிடமே தந்து
தன்னிடமிருந்த 60ரூயை
செலவுக்கு தந்தார்.

தான் அறிந்த பெண்
போலீசு அதிகாரிக்கு தகவல் தந்து
அத்தியாவசிய பொருட்களையும்
வாங்கித்தந்தார்.

- மே3 தினத்தந்தி நாளிதழில்.

0 பின்னூட்டங்கள்: