> குருத்து: Memories of Murder (2003) தென்கொரியா

May 3, 2020

Memories of Murder (2003) தென்கொரியா

கதை. இளம்பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். எந்தவித சாட்சியம் இல்லாமல் போலீஸ் திணறுகிறது. தொடர்ச்சியாய் நடக்கும் கொலைகள் மக்களிடையே பீதியை உருவாக்குகிறது. மேலிருந்து வரும் அழுத்தத்தில், போலீசு அப்பாவிகளை வழக்கில் சிக்க வைக்க பார்க்கிறார்கள். இந்த வழக்கின் மீது ஆர்வம் கொண்டு, மாற்றல் கேட்டு வருகிறார் ஒரு விசாரணை அதிகாரி.

ஒரு பண்பலைக்கு ஒரு குறிப்பிட்ட பாடலை ஒருவர் விரும்பி கேட்கிறார். அந்த பாடல் ஒலிக்கும் பொழுது கொலைகள் நடக்கின்றன என கண்டுபிடிக்கிறார்கள்.

பல அலைக்கழிப்புகளுக்கு பிறகு, சீரியல் கொலைகாரனை கண்டுபிடித்தார்களா என்பது மீதிக்கதை.

*****

ரெம்ப நாளைக்கு முன்பே, தரவிறக்கம் செய்துவிட்டேன். சப் டைட்டில் தேடி நேற்று தான் பார்த்தேன்.

தென்கொரிய படங்களில் முக்கியமான படம் என்கிறார்கள். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானது என்பது கூடுதல் சிறப்பு. பல விருதுகளையும் பெற்றிருக்கிறது.

எல்லா ஊரிலும், கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அப்பாவிகளை அடித்து உதைத்து, சொந்த கற்பனையில் திரைக்கதை எழுதுவது என (பல சமயங்களில் பல் இளித்திருக்கிறது) எல்லா ஊரிலும் போலீசின் இயல்பு ஒன்று தான் நிரூபிக்கிறார்கள்.

தப்பு செய்தவன் இவன் தான் என தெரிந்தும்.. உரிய சாட்சியங்கள் இல்லாமல் ஏதும் செய்ய முடியவில்லையே என அந்த விசாரணை அதிகாரி மனம் வெதும்புவதும்...! அருமை.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல்களை எசகுபிசகாக காட்டாமல், இயக்குநர் கண்ணியம் காத்திருக்கிறார்.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: